பிரிட்டனில் ஒரு வயல் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் மூன்று அரச கடற்படை உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் பெயர்கள் இன்று பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 31 வயது லெப்டினன்ட் லில்லி-மே ஃபிஷர், 42 வயது லெப்டினன்ட் கமாண்டர் கிறிஸ் கெய்சன் மற்றும் 24 வயதான கடற்படை இளநிலை அதிகாரியான ஓவன் கிரீன் ஆவர்.
புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில், ஓக்ஹாம்ப்டனுக்கு அருகிலுள்ள சோர்டன் டவுன் என்ற இடத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதை அடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த மூவருக்கும் பிரிட்டன் ஆயுதப் படையினர் அஞ்சலி செலுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விபத்து பற்றி அறியப்படுவதற்கு பலத்த காற்று, கனமழை மற்றும் குறைந்த பார்வைத் திறன் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.



















