Home இலங்கை யாழில் காவல்துறையின் திடீர் நடவடிக்கை-சிக்கிய ஆயுதங்கள்

யாழில் காவல்துறையின் திடீர் நடவடிக்கை-சிக்கிய ஆயுதங்கள்

0

நேற்று இரவு 09.30 மணியளவில் மானிப்பாயில் வாள் மற்றும் கோடரிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் காவல்துறையினரால் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்தே வாள்கள், மற்றும் கோடரிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த காணியில் மிக இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது 2 கஜேந்திர கோடரிகள், நீளமான வாள் ஒன்றும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ள போதும், எவரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version