மீண்டும் பதவியேற்றுக்கொண்ட முன்னால் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்…

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் உடன் நடைமுறையாகும் வகையில் இடம் மாற்றம் பெற்றுச் சென்றதன் பின்னர், காவல்துறை ஊடகப் பிரிவுக்கு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் அஜித் ரோஹண மீண்டும் ஊடகப் பேச்சாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

அஜித் ரோஹண, கடந்த வருடம் ஜூன் மாதம் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக பதவி உயர்வு பெற்றிருந்த நிலையில், ஜூலை மாதம் உடன் நடைமுறையாகும் வகையில் இடம் மாற்றம் பெற்றிருந்தார்.

Exit mobile version