இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு முக்கிய பதவி

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் பந்துவீச்சு வியூக பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி அவுஸ்திரேலியா செல்லவுள்ளது.

இந்தத் தொடர் பிப்ரவரி 11 முதல் 20 வரை நடைபெறும்.

Exit mobile version