திடீரென துபாய்க்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் வர்த்தக அமைச்சர்

நேற்று துபாய் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவது இந்த விஜயத்தின் நோக்கம் என்பதுடன் அமைச்சர் பந்துவ குணவர்தன, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் சர்வதேச வர்த்தக அமைச்சர் கலாநிதி தானி பின் அஹமத் அல் சேய்தியை சந்திக்க உள்ளார்.

அத்துடன் துபாய் கண்காட்சி மத்திய நிலையத்தில் இன்று 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெறும் இலங்கை ஏற்றுமதி சம்பந்தமாக கண்காட்சியை அமைச்சர் பந்துல குணவர்தன ஆரம்பித்து வைக்க உள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version