Home இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம்-வெளியான புதிய அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திரம்-வெளியான புதிய அறிவிப்பு

0
சாரதி அனுமதிப்பத்திரம்-வெளியான புதிய அறிவிப்பு

அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அட்டைகளுக்கு பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் நீடிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் மேலும் 6 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக அத் திணைக்கம் தெரிவித்துள்ளது.

01 யூலை 2022 – 30 செப்ரெம்பர் 2022 திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் மேலும் 3 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here