வயோதிப பெண் கொலை திருடப்பட்ட தங்க ஆபரணங்கள்

நேற்று மாலை தலவாக்கலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மடக்கும்புற பகுதியில் 84 வயதான வயோதிப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு, அவரது தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த பெண், வாய் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version