அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரும் மக்களுக்கு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இலங்கை செல்லும் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளுக்கு அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கைக்கு சுற்றுலா செல்லும் போது அதிக அவதானத்துடன் செயற்படுமாறு அவுஸ்திரேலியா தமது நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதனை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பல பாகங்களில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், எரிபொருள் இன்மை மற்றும் மின்தடை என்பன தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

இதற்கமைய வாகன போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்தின் போது இன்னல்கள் ஏற்படக் கூடும் அவுஸ்திரேலியா தமது நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version