Home ஆன்மீகம் ராசிபன் இன்றைய நாளுக்கான ராசி பலன் (13-05-2022)

இன்றைய நாளுக்கான ராசி பலன் (13-05-2022)

0
இன்றைய நாளுக்கான ராசி பலன் (13-05-2022)

மேஷராசி

நேயர்களே, பெற்றோர்கள் ஆலோசனை உதவியாக இருக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பாலிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் அந்தஸ்து உயரும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்ப பணிகள் திறம்பட நடக்கும். யாருடனும் வம்பு வழக்கு வேண்டாம். நல்ல மனிதர்களின் பரிபூர்ண நட்பு கிடைக்கும். புது தொழில் யோகம் அமையும்.

மிதுன ராசி

நேயர்களே, எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். புது வாகனம் ஒன்றை வாங்க முடியும். கணவன் மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடக ராசி

நேயர்களே, எதிர்காலம் குறித்த கவலை இருக்கும். யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூட ஆரம்பிக்கும். விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டாகும். பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்ப சிக்கலை தீர்க்க வழி கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.உண்டு.

துலாம் ராசி

நேயர்களே, வாக்கு சாதுரியம் ஏற்படும். விமர்சனங்களை அதிகம் சந்திக்க வேண்டிவரும். வங்கி சேமிப்பு கணிசமான முறையில் உயரும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். உங்கள் தனி திறமைகள் வெளிப்படும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

தனுசு ராசி

நேயர்களே, மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவர். கணவன், மனைவி உறவு பலப்படும். புதிய தொழில், முயற்சிகள் இப்போதைக்கு வேண்டாம்.

மகர ராசி

நேயர்களே, குடும்ப முன்னேற்றத்தில் கவனம் தேவை. விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் அமைதி உண்டாகும். காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். திருமண முயற்சி கைகூடும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version