Home இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சபாநாயகர் பதவிக்கு கோரிக்கை விடுத்த புதிய பிரதமர்

பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சபாநாயகர் பதவிக்கு கோரிக்கை விடுத்த புதிய பிரதமர்

0

இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த குழுவிடம் .பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் மே 17ஆம் திகதி கூடும் போது பிரதி சபாநாயகரை நியமிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் போது பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்குமாறு கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சபாநாயகர் பதவி! கோரிக்கை விடுத்த ரணில்

முன்னர் பிரதி சபாநாயகராக இருந்த ரன்ஜித் சியம்பலாபிடிய இராஜினாமா செய்ததனை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version