Home இலங்கை எரிபொருள் இல்லாது தவிக்கும் எரிவாயு கப்பல்!

எரிபொருள் இல்லாது தவிக்கும் எரிவாயு கப்பல்!

0

இலங்கைக்கு வந்தடையவிருந்த 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம்தெரிவித்துள்ளது.இந்தக் கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலுக்கு தேவையான எரிபொருளை இலங்கையில் வழங்க முடியாமையால், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, குறித்த எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைய மேலும் இரண்டு நாட்களாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version