டிஜிட்டல் அடையாள அட்டைகளுக்குப் பதிவு செய்வதாகக் கூறி, மோசடி நபர்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் நிதி மோசடிகளை மேற்கொள்வதற்கும் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ உதவி எண்ணை ஒத்த தொலைபேசி எண்கள் மூலம் தனிநபர்கள் பொதுமக்களைத் தொடர்புகொண்டு, டிஜிட்டல் அடையாள அட்டைகள் அல்லது மின்னணு தேசிய அடையாள அட்டைகளுக்கான பதிவுகளை மேற்கொள்வதாகக் கூறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. +94 11 5226126, 011 5226126, 0771167739 மற்றும் 0742756098 உள்ளிட்ட தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கைகள் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோசடிக்குப் பின்னால் உள்ள நபர்கள், அரச இலட்சிகனைகள்ப் பயன்படுத்தி ஒரு மொபைல் செயலியை உருவாக்கி, டிஜிட்டல் அடையாள அட்டை பதிவுக்குத் தேவை என்று கூறி பொதுமக்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைக் கோரி வருகின்றனர். தற்போது டிஜிட்டல் அடையாள அட்டைகள் அல்லது மின்னணு தேசிய அடையாள அட்டைகளுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த மோசடி நடவடிக்கைகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக பொதுமக்கள் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
