வியாழக்கிழமை இரவு, உக்ரேனும் ரஷ்யாவும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டன.
இந்தத் தாக்குதல்களில் ரஷ்யா உக்ரேனின் ரயில் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், உக்ரேன் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய இரசாயனப் பகுதியின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களின் போது, மூவர் காயமடைந்தனர். அதேநேரத்தில், ரஷ்யா நடத்திய தாக்குதலில் ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதல்கள் உக்ரேனும் ரஷ்யாவும் நடத்திய பெரிய வான்வழித் தாக்குதல்களின் கூட்டுத் தொடராக அமைந்துள்ளது.
