பிந்திய செய்திகள்

பிரிட்டிஷ் காவல்துறையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய கஞ்சா பறிமுதல்: 139 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பொருட்கள் பறிக்கப்பட்டுள்ளன

பிரித்தானியாவின் வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவில், பாதுகாப்புப் பிரிவினர் அதிரடியாக 12 தொன் எடையுள்ள கஞ்சா போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 139 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.

இந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தென் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் ஆண்கள் மற்றும் ஒருவர் பெண் ஆவார். கனடாவிலிருந்து பிரித்தானியாவுக்குக் கடத்தி வரப்பட்ட இந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடா எல்லைச் சேவைகள் முகவரகத்தின் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், பிரித்தானியாவை நோக்கி வந்த ஒரு போதைப்பொருள் கப்பல் வழிமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, இக்கடத்தலின் பின்னணியில் இருந்த உள்நாட்டுச் சூத்திரதாரிகளைக் கண்டறியும் நோக்கில் தென்மேற்கு பிராந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவு தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts