பிந்திய செய்திகள்

தொகையால் மறைந்து வரும் துறாிகளுக்கு ரோபோ துணை

பௌத்த மதமும் தொழில்நுட்பமும் சேர்ந்து ஒரு நிகழ்வாக மாறியுள்ளன. சியோலில் உள்ள ஜோக்யே ஆலயத்தில், தென்கொரியாவின் முதல் மனித உருவ துறவி ரோபோ அறிமுகமானது.

100 பேருக்கு மேலான பார்வையாளர்கள் அதைக் கண்டனர். காபி என்று அழைக்கப்படும் இந்த ரோபோ துறவியின் அறிமுகம், புத்தரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக நடைபெற்றது. இந்த நிகழ்வு பௌத்த துறவிகளுக்கும் செயற்கை நுண்ணறிவின் மாதிரிகளுக்கும் இடையே ஒரு சரியான உதாரணமாகும்.

இந்த ரோபோ துறவியின் உயரம் 130 சென்டிமீட்டர், மேலும் அது பாரம்பரிய சாம்பல் மற்றும் பழுப்பு நிற பௌத்த ஆடைகளை அணிந்து நின்றது. அந்த ரோபோ துறவிகளுக்கு முன்னால் அறிமுகம் செய்யப்பட்டபோது, ​​ஒரு துறவி பௌத்த மதத்திற்கு அந்த ரோபோ தன்னை அர்ப்பணித்துக் கொள்வதா? என்று கேட்டார். அதற்கு அந்த ரோபோ துறவியானது, “ஆம், நான் என்னை அர்ப்பணித்துக் கொள்வேன்” என்று பதிலளித்தது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts