ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில் விவசாய, கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்கவின் தலைமையிலான அமைச்சரவைக்குப் பரிந்துரைகள் வழங்கும் குழுவின் பணியைப் பற்றியும், சுற்றறிக்கைகள் திருத்தம் தொடர்பான கருத்துக்களைப் பற்றியும் ஜனாதிபதியோடு அமைச்சரவைக்குப் பரிந்துரைகள் வழங்கும் குழுவின் அங்கத்தவர்கள் கலந்துரையாடினார்கள்.
அமைச்சரவைக்குப் பரிந்துரைகள் வழங்கும் இந்த குழுவிற்கு விவசாய, கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்கவின் தலைமையிலான இருபத்தி நான்கு அங்கத்தவர்கள் செயற்படுவர். இக்குழுவின் அழைப்பாளராக காணி ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழுவின் பணியாக அரச காணிக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு அமைவாக இரத்து செய்ய வேண்டிய சுற்றறிக்கைகளை இரத்துச் செய்து புதிய சுற்றறிக்கைகளை வெளியிடுவதற்கும், திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டிய சுற்றறிக்கைகளை தற்காலத்திற்கு உகந்தவகையில் திருத்துவதற்காக சுற்றறிக்கைகள் திருத்தக் குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடலாகும்.
சுற்றறிக்கைகளை திருத்துவதற்கும், புதிய கட்டளைகளை தயாரிப்பதற்கும் குழுவிற்கு பரிந்துரைகள் வழங்குவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அமைச்சரவைக்குப் பரிந்துரைகள் வழங்கும் குழுவிற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக மேல் மாகாண காணி ஆணையாளர் நாயகத்தை அழைப்பாளராக நியமித்துள்ளார்.
