வவுனியா வடக்கு மக்களுக்கான ரவிகரனின் மக்கள் குறைகேள் சந்திப்பு

வவுனியா வடக்கு – நெடுங்கேணி, ஒலுமடுப்பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (29) இன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். இச்சந்திப்பில் கிராமத்தின் அபிவிருத்தி சார்ந்த விடயங்களைப் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு மக்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அத்தோடு ஒலுமடு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பான முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், கிவுல் ஓயா ஆக்கிரமிப்பு சாரந்த விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் மக்களால் முறையீடுசெய்யப்பட்ட போது, தித்வா பேரிடரின்போது ஏற்பட்ட நெற்செய்கை அழிவுகளுக்கான இழப்பீடுகள் இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் சொல்லப்பட்டது. அத்துடன் நயினாமடு ஸ்ரீ ஆதி ஞானவைரவர் ஆலயத்தின் சீரமைப்புப் பணிகள் தொடர்பிலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதுவரை நடந்த மக்கள் குறைகேள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு கவனித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.