ஐபோன் பயனர்களை கவலை அடையச் செய்த புதிய கண்டுபிடிப்பு: பயனர் அனுமதி இன்றி மென்பொருள் படத்தில் ஊடுருவுகிறது

மில்லியன் கணக்கான ஐபோன் பயனாளர்களின் தனியுரிமைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், புதிய உளவு மென்பொருள் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மென்பொருள், சாதனங்களுக்குள் ஊடுருவக்கூடியதாக இருந்து, பயனாளர்கள் எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்யாமலேயே தொலைபேசிக்குள் ஊடுருவும் திறன் கொண்டது.

இந்த உளவு மென்பொருள், பயனாளரின் தொலைபேசிக்குள் நுழைந்துவிட்டால், அந்தச் சாதனத்தில் உள்ள குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் மற்றும் இருப்பிடத் தரவு உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் திருடவும், இரகசியமாகக் கெமரா மற்றும் மைக்ரோஃபோனை இயக்கவும் முடியும். இந்த மென்பொருள் குறிப்பாக அரசு சாரா அமைப்புகள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

ஆப்பிள் நிறுவனம் தனது பாதுகாப்பு அமைப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வந்தாலும், இத்தகைய மேம்பட்ட மென்பொருள்கள் அதன் பாதுகாப்புக் கோட்டையைத் தகர்ப்பது தொழில்நுட்ப உலகில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐபோன் பயனாளர்கள் தங்களது மென்பொருளை எப்போதும் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பித்துக்கொள்ளுமாறும், தேவையற்ற மற்றும் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் செய்திகளைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.