இலங்கைக்கு சபாநாயருக்கும் உறுதியான கோவிட் தொற்று…!

இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது இலங்கையின் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தகவல்களை மேற்கோள்காட்டி குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற அரச தலைவரின் கொள்கைப் பிரகடன உரை மற்றும் அதன் மீதான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், இது வரையில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் சபாநாயருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version