20 சதவீதத்தால் மருந்துப் பொருட்களின் விலை உயர்வு

இறக்குமதி மருந்துப் பொருட்களின் விலைகளை 20 சதவீதத்தால் அதிகரிக்க மருந்து இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

எனினும், ஏற்கனவே விலைகள் அதிகரிக்கப்பட்ட மருந்துப் பொருட்களுக்கு இது பொருந்தாது என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version