வவுனியாவை சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தையுடன் இந்தியாவிற்கு சென்ற குடும்பம்

வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் இறங்கி உள்ளனர்.

இதேவேளை, இவர்களை காவல்துறையினர் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 22ம் தேதியில் இருந்து இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version