ஈரானின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள 300 பில்லியன் டாலர் தனியார் முதலீட்டு நிதி திட்டம், வொஷிங்டன் மற்றும் தெஹ்ரான் நகரங்களுக்கு இடையில் ஏற்பட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. இந்த நிதி திட்டத்திற்கான நிதியுதவியின் பெரும்பகுதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த பேச்சுவார்த்தைகள் பற்றி நன்கு அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
வொஷிங்டன் மற்றும் தெஹ்ரான் நகரங்கள் வெள்ளிக்கிழமை (19) ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராகி வரும் நிலையில், இந்த திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வட்டாரம், இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு தரப்பினருக்கும் பொருளாதார ஊக்கத்தை அளிக்கும் வகையில் இந்த நிதி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறியது.
இந்த புதிய நிதி ஒரு தனியார் முதலீட்டுத் திட்டம் என்றும், இது ஒரு புனரமைப்பு அல்லது இழப்பீட்டுத் திட்டம் அல்ல என்றும், இதில் எந்தவொரு அரசாங்கப் பணமோ அல்லது மானியங்களோ இடம்பெறாது என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது. மேலும், அமெரிக்கா, வளைகுடா அரபு நாடுகள், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க ஒப்புக்கொண்டுள்ளன என்றும் அது குறிப்பிட்டது.
எரிசக்தி, தளவாடங்கள், உற்பத்தி மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் முதலீடுகள் உறுதியளிக்கப்பட்டுள்ளன என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக தெஹ்ரான் முதலில் அமெரிக்காவிடம் இருந்து 400 பில்லியன் டாலர்களைக் கோரியதாகவும், ஆனால் வொஷிங்டன் அதை வழங்காது என்று கூறியதாகவும் ஒரு மூத்த ஈரானிய வட்டாரம் தெரிவித்தது.
