மேற்காசியாவில் தற்போது நிலவும் பதற்றமான சூழலில், இந்தியர்கள் யாரும் ஈரானுக்குப் பயணம் செய்யக்கூடாது என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்குக் காரணம் ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவும் போர் நிலைமையாகும். இந்த போர் காரணமாக, மேற்காசியா முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இஸ்ரேல் நாடு, ஈரானின் எச்சரிக்கையை மீறி பெய்ரூட் நகரின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதற்குப் பழிவாங்கும் விதமாக, ஈரான் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் நாட்டின் விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்கள் காரணமாக, ஈரானின் தலைநகரில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்தின் அனைத்து நாடுகளுக்கான விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல, சிரியா நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம், டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகளை இரவு 11 மணி வரை நிறுத்தி வைத்துள்ளது. இந்த போர் நிலைமையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாத அமைப்பு, செங்கடலில் இஸ்ரேல் கப்பல்களுக்கு முழுமையான தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியர்கள் யாரும் ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தற்போது ஈரானில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







































