புத்தாண்டுக்கு பிறகு பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கபடுமா?

நேற்று இடம்பெறவிருந்த புதிய அமைச்சரவை நியமனம்,
புத்தாண்டுக்கு பிறகு நடைபெறும் என தெரியவருகின்றது.

கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் இறுதி நேரத்தில் பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என தெரியவருகின்றது.

புதிய அமைச்சரவையில் 25 இற்கும் குறைவானவர்களே அங்கம் வகிப்பார்கள் என கூறப்படும் அதேவேளை , ராஜபக்சக்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படமாட்டாது எனவும் அறியமுடிகின்றது.

அதேசமயம் , அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கும் செயலை பிரதான எதிர்க்கட்சியும் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version