தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பாக சிங்கப்பெண் சிறப்புஅதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பிக்கப்படும்.
இத்திட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் மாலை ஐந்து மணிக்கு விழாவுடன் இருக்கும்.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சிறப்பு உரையாற்றுவார். தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலும் கலந்துகொள்வார்.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த, தவெக அரசால் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்தை முதலமைச்சர் விஜய் கடந்த மே 29ம் திகதி ஆரம்பித்து வைக்கவிருந்தார். எனினும், பல்வேறு காரணங்களால் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது.









































