ல
இலங்கைக்கு எதிரான தனது டி20 தொடருக்கான தயாரிப்புகளை மேற்கிந்தியத் தீவுகள் அணி முடித்து விட்டது. இந்தத் தொடர் ஜூன் 11 முதல் 14 வரை ஜமைக்காவின் சபினா பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலில் விளையாடியது, அதில் முதல் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னரான இரண்டு போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டன.
கிரிக்கெட் மேற்கிந்தியத் தீவுகள் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது, அதில் ஷாய் ஹோப் அணியை வழிநடத்துவார். ரோஸ்டன் சேஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன் மற்றும் பிற நட்சத்திர வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக விளையாடிய பிறகு, அவர்கள் பங்கேற்கும் முதல் டி20 தொடர் இதுவாகும். இந்தப் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 2028 இல் நடைபெறவிருக்கும் தொடருக்கான நீண்டகாலத் தயாரிப்புகளின் ஒரு முக்கிய அங்கமாகவும் அமைகிறது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற உலகளாவிய தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து அபாரமான இளம் துடுப்பாட்ட திறமையாளர்களான அகீம் அகஸ்டே, ஜூவல் ஆண்ட்ரூ மற்றும் சகலதுறை வீரர் ஷமர் ஸ்பிரிங்கர் ஆகிய மூன்று வீரர்கள் இந்தத் தொடருக்க சேர்க்கப்பட்டுள்ளனர். பணிச்சுமை மேலாண்மைத் திட்டங்களின் ஒரு பகுதியாக வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் தேர்வுக்குப் பரிசீலிக்கப்படவில்லை. அவர் ஆன்டிகுவாவில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாகத் தனது பயிற்சியையும் ஆயத்தப் பணிகளையும் தொடர்வார்.உள்ளூர் ரசிகர்களை







































