தெற்கு லெபனானில் நேற்று நடந்த தீவிர வான்வழித் தாக்குதல்களில், ஹிஸ்புல்லா அமைப்பின் பல போராளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், அந்த அமைப்பின் பல தளங்கள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ராணுவக் கட்டடங்கள் ஒழிக்கப்பட்டதாக, இஸ்ரேல் இராணுவம் நிரூபித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேல் இராணுவம், தனது வலைத்தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் 70க்கும் மேற்பட்ட தளங்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில், லெபனானைச் சேர்ந்த குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், ஓரு லெபனான் இராணுவ வீரர் படுகாயமடைந்துள்ளார் என்றும் லெபனான் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.










































