பிந்திய செய்திகள்

அமெரிக்கா ஈரானின் மீது தாக்குதலை மீண்டும் தொடங்கியது.

அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளது. இது அமெரிக்கப் படைகள் ஹார்முஸ் நீரிணையில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்தது. அமெரிக்க மத்திய கட்டளை மையம் கிழக்கு நேரப்படி மாலை 5:00 மணிக்கு தாக்குதல்களைத் தொடங்கியதாகக் கூறுகிறது.

இந்த நடவடிக்கை நியாயமற்ற ஈரானிய ஆக்கிரமிப்புக்கு தகுந்த பதிலடியாகவே எடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

பாரசீக வளைகுடாவின் கடற்கரை மற்றும் ஹார்முஸ் நீரிணை நெடுகிலும் குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன.

விபத்துக்குள்ளான அமெரிக்க ஹெலிகொப்டரின் இரண்டு பணியாளர்களும் அமெரிக்க கடல் ட்ரோன் மூலம் மீட்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்தது.

ஈரான் இந்தத் தாக்குதலை நடத்த ஒரு ட்ரோனைப் பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகளின் கூறுகின்றனர்.

ஆனால், ஈரானிய ட்ரோன் வேண்டுமென்றே ஹெலிகொப்டரைத் தாக்கியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதேவளை, ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலுக்கோ அல்லது அச்சுறுத்தலுக்கோ பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

போர் உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ளது, உலகெங்கிலும் எரிசக்தி விலைகளை உயர்த்தியுள்ளது, மேலும் உணவு உட்பட பல அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts