திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய பதவியில் தமிழ் பெண்

2021ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த எஸ். நிருபா , நிர்வாக சேவை உள்ளக பயிற்சிகளை முடித்துக்கொண்டதன் பின்னர் இந்நியமனம் கிடைக்கப் பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக எஸ். நிருபா நியமிக்கப்படுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை மூன்றாம் தர உத்தியோகத்தரான இவர், இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானமும் போசாக்கும் துறையில் ஆரம்ப பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version