கனடாவின் கிழக்கு மாகாணங்களான ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நேற்று கடுமையான புயலுடன், இடி மின்னலோடு பலத்த மழையும் பெய்தது.
இந்த காலநிலை மாற்றம் காரணமாக 4 பேர் பலியாகியுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வரிந்து விழுந்தன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.
![கனடாவில் பேரிடர்!! லட்சக்கணக்கானோருக்கு ஏற்பட்ட நிலை](https://cdn.ibcstack.com/article/9bc3b3ef-4a2e-4ac4-a6e0-321c55274310/22-6289f367b13cc.webp)