பிந்திய செய்திகள்

உணவில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதால் என்ன பயன்கள்!

சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழித்து குடல், வயிறு சுத்தமாகும்.

சிலருக்கு பசி உணர்வு குறைவாக இருக்கும். இவர்கள் சுண்டைக்காயை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சளி அல்லது ஜலதோஷம் உள்ளவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து அல்லது சுண்டைக்காய் காரக்குழம்பு வைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.

நமது உடலில் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் வயதாக வயதாக எழுப்புகளின் உறுதித்தன்மை குறைந்து கொண்டே வரும்.

சுண்டைக்காயில் கல்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எனவே சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியடையும்.

எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்படுகிறது. சுண்டை வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை விரைவில் நீங்கும்.

கடுமையான மலச்சிக்கலே மூலம் நோய் வருவதற்கு பிரதான காரணமாக இருக்கிறது. அதேபோல் அதீத உடல் உஷ்ணம் மற்றும் அதிக அளவு கார உணவுகள் சாப்பிடுவதாலும் மூலம் உருவாகிறது.

இளம் சுண்டைக்காய்களை மிதமான காரம் சேர்த்து குழம்பு வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts