Home உலகம் இந்தியா முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொலை செய்வோம்!!! – அல்-கய்தா

முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொலை செய்வோம்!!! – அல்-கய்தா

0
முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொலை செய்வோம்!!! – அல்-கய்தா

இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவை சேர்ந்த நூபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜின்டால் ஆகியோரின் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்துக்கு அல்-கய்தா எதிர்வினையாற்றி உள்ளது.

முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொலை செய்வோம் எனவும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் எனவும், அல்-கய்தா எச்சரித்துள்ளது.

இந்திய துணைக்கண்டத்தின் அல்-கய்தா அழைத்துக்கொள்ளும் இந்த ஜிகாதி குழு உருது மற்றும் ஆங்கிலத்தில் செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை, அதன் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களான டெலிகிராம், ராக்கெட்சாட், சிர்ப்வயர் ஆகியவற்றில் வெளியிட்டது.

முகமது நபியை இழிவுபடுத்துபவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது. இத்தகைய விவகாரத்திற்கு கண்டன வார்த்தைகள் மூலமாகவோ அல்லது வருத்தத்தின் மூலமாகவோ எதிர்வினையாற்றப்படாது எனவும் அவை வன்முறை தாக்குதல்கள் மற்றும் பதிலடியால் மட்டுமே எதிர்கொள்ளப்படும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here