பிந்திய செய்திகள்

லசித் மலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் கிடைத்த புதிய பதவி!

முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளார்.

எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராகவே லசித் மலிங்க நியமனம் பெற்றுள்ளார்.

இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

லசித் மலிங்க இந்த வருட ஐபிஎல்லில் ராஜஸ்த்தான் றோயல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்த்தான் றோயல்ஸ் அணி இறுதியாட்டாம் வரை முன்னேறியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts