பிந்திய செய்திகள்

பாகிஸ்தான் அணி கேப்டன் புதிய சாதனை

பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று பகல்- இரவாக நடந்தது முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன் குவித்தது.

பென் மெக்டர் மட் 104 ரன்னும், டிரெவிஸ் ஹெட் 89 ரன்னும், லபுஷேன் 59 ரன்னும், ஸ்டோனிஸ் 49 ரன்னும் எடுத்தனர். ‌ஷகீன்ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், முகமது வாசிம் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

349 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடியது.அந்த அணி ஒரு ஒவர் எஞ்சிய நிலையில் 349 ரன் இலக்கை எடுத்தது. பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 349 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டன் பாபர் ஆசம், தொடக்க வீரர் இமாம்- உல்-ஹக் ஆகியோர் சதம் அடித்தனர். பாபர் ஆசம் 83 பந்தில் 114 ரன்னும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), இமாம்-உல்-ஹக் 97 பந்தில் 106 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) பகர் ஜமான் 67 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

பாபர் ஆசம் 15-வது சதத்தை பதிவு செய்தார். 83 இன்னிங்சில் இதை எடுத்து சாதனை புரிந்தார். இதற்கு முன்பு ஹாசிம் அம்லா 86 இன்னிங்சில் 15 சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.மேலும் பாகிஸ்தான் அணி ரன் இலக்கை எட்டியதிலும் புதிய சாதனை படைத்தது

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts