Copyrights © 2026 Tamilwin. All rights reserved.
ஐரோப்பிய நாடான இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் மின்தூக்கி அருகே, இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
இலங்கையர் மீதான வன்முறையுடன் கூடிய கொள்ளை மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக, அல்ஜீரியாவைச் சேர்ந்த 32 வயதான Nadhir Brighen என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் ஏற்கனவே பொலிஸாரின் குற்றப் பதிவேடுகளில் உள்ளவர் என தெரியவந்துள்ளது.
மின்தூக்கியில் ஏறுவதற்காக 57 வயதான இலங்கை நபர் ஒருவர் காத்திருந்த போது, Brighen அவரைப் பின்புறமிருந்து தாக்கி, அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துள்ளார்.
எனினும் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் விரைந்து செயற்பட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மேலும் சந்தேக நபரிடமிருந்து கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் லேசான காயமடைந்த இலங்கையருக்கு அதிகாரிகள் முதலுதவி அளித்தனர்.
கைது செய்யப்பட்ட Brighen தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்காக காத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada
அரியாலை, London, United Kingdom
உடுப்பிட்டி
அல்வாய், Colchester, United Kingdom
நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia
உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom
தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom
பருத்தித்துறை
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland
புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்
மட்டக்களப்பு, Toronto, Canada
அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை
நுணாவில் மேற்கு, மன்னார்
London, United Kingdom
நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada
மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை
வண்ணார்பண்ணை
பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom
மானிப்பாய், கொட்டாஞ்சேனை
Markham, Canada
சுதுமலை, நல்லூர், கனடா, Canada
அளவெட்டி, கொழும்பு
புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom
Copyrights © 2026Tamilwin. All rights reserved.
மூல செய்தி: Tamilwin













































