Home உலகம் இந்தியா இந்திய-இலங்கை உறவு தொடர்பில் இந்திய பிரதமர் வெளியிட்ட பதிவு

இந்திய-இலங்கை உறவு தொடர்பில் இந்திய பிரதமர் வெளியிட்ட பதிவு

0
இந்திய-இலங்கை உறவு தொடர்பில் இந்திய பிரதமர்  வெளியிட்ட பதிவு

இந்திய – இலங்கை மக்களுக்கு இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அந்நாட்டு மக்களுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இலங்கை பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்தப் பதவில் பிரதமர் மஹிந்த ராஜபக்வுக்குஷ நன்றி. இரு நாடுகளும் சுதந்திரத்தின் 75 ஆண்டு மைல்கல்லை கொண்டாடும் இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்தது எனக் கூறியுள்ளார்.

அத்துடன் நம் நாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here