Home உலகம் இந்தியா சென்னையில் கடற்கரைகளுக்கு நாளை முதல் செல்ல அனுமதி…

சென்னையில் கடற்கரைகளுக்கு நாளை முதல் செல்ல அனுமதி…

0
சென்னையில் கடற்கரைகளுக்கு நாளை முதல் செல்ல அனுமதி…

சென்னையில் கடற்கரைகளுக்கு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரோன் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம், கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி மறுப்பு, வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், தேவாலயங்களுக்கு மக்கள் செல்ல தடை என பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் சென்னையில் மெரீனா, பெசண்ட் நகர் கடற்கரை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த சில நாள்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தி அரசு உத்தரவிட்டது.

இதை அடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து வணிக நிறுவனங்கள், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது.

இந்நிலையில், பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் கடற்கரைகளில் கூட்டமாக கூடக் கூடாது. முகக்கவசம் அணிந்து செல்வது போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here