பிந்திய செய்திகள்

வெந்தயம் -கருஞ்சீரகம் இதில் இத்தனை நன்மைகளா?

நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு மக்கள் பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற உணவுப் பொருட்களை உட்கொண்டு வருகின்றோம். அதில் உடல் ஆரோக்கியத்திற்காக சமையலறையில் உள்ள மசாலா பொருட்களையும் பலர் சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு மசாலா பொருட்களும் மருத்துவ குணங்களைக் கொண்டவை.

அதில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகமும் ஒன்று. இந்த இரண்டு விதைகளையும் சரியான அளவில், சரியான வழியில் உட்கொண்டு வந்தால், அது உடலுக்கு பல வழிகளில் நன்மைகளை அளிக்கும்.

வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தின் நன்மைகள்

வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் ஆகிய இரண்டுமே அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை. அதில் வெந்தயத்தில் நார்ச்சத்து, புரோட்டீன், ஃபோலேட், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கூடுதலாக, வெந்தயத்தில் மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் போன்றவையும் அதிகம் உள்ளன. அதே வேளையில் கருஞ்சீரகத்தில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கால்சியம், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய விதைகளை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

செரிமானம் மேம்படும்

வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் ஆகிய இரண்டுமே வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளன. ஆம், வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து, அந்நீரை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது குடித்து வர வாய்வு தொல்லை, வயிறு உப்புசம் மற்றும் அடிவயிற்று வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம். அதோடு செரிமான மண்டலத்தின் செயல்பாடும் மேம்படும்.

கல்லீரலுக்கு நல்லது

இன்று பலர் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். கல்லீரலை ஆரோக்கியமாக்குவதில் கருஞ்சீரகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக கல்லீரலில் படியும் கொழுப்புக்களை நீக்குவதில் கருஞ்சீரகம் சிறந்தது. இது தவிர அனைத்து கல்லீரல் பிரச்சனைகளையும் போக்க வல்லது. அதுவும் கருஞ்சீரகத்தை வெந்தயத்துடன் சேர்த்து நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால், விரைவில் கல்லீரலில் உள்ள கொழுப்பு குறையும் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமும் மேம்படும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் ஆகிய இரண்டும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இரண்டுமே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வெந்தயம் மற்றும் கருஞ்சீரக விதைகள் கணையத்தில் பீட்டா செல் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. அதற்கு இவை இரண்டையும் நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடிக்க வேண்டும்.

சருமம் மற்றும் முடிக்கு நல்லது

வெந்தய விதைகள் மற்றும் கருஞ்சீரக விதைகளில் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் கருஞ்சீரக விதைகளில் நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின் பி, வைட்டமின் பி12, நியாசின் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன. இவை இரண்டையும் ஒன்றாக நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால், சருமம் மற்றும் தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்

வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆகவே இவற்றை உட்கொள்வதன் மூலம் புற்றுநோயின் அபாயம் குறையும். அதற்காக இது புற்றுநோயை முற்றிலும் குணமாக்கிவிடும் மருந்தல்ல. புற்றுநோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்கும்

வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் ஆகிய இரண்டு விதைகளுமே உடல் பருமன் கொண்டவர்களுக்கு மிகவும் நல்லது. அதற்கு வெந்தயம் மற்றும் கருஞ்சீரக விதைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, வெயிலில் 2 நாட்கள் உலர்த்த வேண்டும். பின் ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 விதைகளை சாப்பிட்டு வந்தால், சில நாட்களிலேயே தொப்பை மற்றும் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts