பிந்திய செய்திகள்

தமிழகம் சென்றயாழ் இளைஞர்கள்இருவர் மீதும் வழக்கு

தமிழகம் சென்ற யாழ் – குருநகர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் மீதும் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால் அவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குருநகர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் தமிழகம் – தனுஷ்கோடியை அண்மித்த தொண்டி பகுதியில் வைத்து இன்று அதிகாலை தமிழக கடலோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் தமிழகத்தில் தஞ்சம் | April 28, 2022

குறித்த இருவரும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஏதிலிகளாக தமிழகத்தில் தஞ்சம் கோரியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த இருவருக்கும் எதிராக இலங்கை நீதிமன்றில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக குறித்த இருவரையும் ஏதிலிகளாக அங்கீகரிக்காமல் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்;துள்ளனர்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts