Home இலங்கை 72 வயதுடைய முதியவர் உடல் கருகி உயிரிழப்பு

72 வயதுடைய முதியவர் உடல் கருகி உயிரிழப்பு

0
72 வயதுடைய முதியவர் உடல் கருகி உயிரிழப்பு

லெமலியர் தோட்டத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர்
தலவாக்கலை – லிந்துலை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட லிந்துலை நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

லிந்துலை நகரில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவேளை, திடீரென குறித்த நபரின் உடையில் தீ பரவியுள்ளது.

குறித்த சடலமானது தற்போது சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் லிந்துலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here