Home இலங்கை புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் குறித்து வெளியான அறிவிப்பு

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் குறித்து வெளியான அறிவிப்பு

0
புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் குறித்து வெளியான அறிவிப்பு

கல்வி அமைச்சு எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என கூறியுள்ளது.

குறித்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை இந்த ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் ஜனவரி 22ஆம் திகதி நடத்தப்பட்டு மார்ச் 13ஆம் திகதி பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

மேலும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன் இம்முறை பரீட்சை 2,943 பரீட்சை நிலையங்களிலும் 108 விசேட நிலையங்களிலும் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here