Home இலங்கை கொழும்பில் தறிகெட்டு ஓடிய காரால் 12 வாகனங்களுக்கு சேதம்

கொழும்பில் தறிகெட்டு ஓடிய காரால் 12 வாகனங்களுக்கு சேதம்

0
கொழும்பில் தறிகெட்டு ஓடிய காரால் 12 வாகனங்களுக்கு சேதம்

கொழும்பு வஜிரா வீதியில் விசாகா வித்தியாலயத்துக்கு அருகில் நேற்று மாலை அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.

கார் தறிகெட்டு ஓடியதால் 9 கார்கள் மற்றும் இரு முச்சக்கர வண்டிகள் உட்பட 12 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந் துள்ளன. அத்துடன் இந்த விபத்தில் கெப் வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாதாரணதரப் பரீட்சை நடைபெற்ற நிலையில் பாடசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களே இவ்வாறு சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேசமயம் விபத்து இடம்பெற்ற போது சாரதி குடிபோதையில் இருந்ததாக பரவும் வதந்திகளையும் பொலிஸார் நிராகரித்துள்ளனர்.

விபத்தின் போது காருக்குள் சாரதி உட்பட இருவர் இருந்த நிலையில் சம்பவத்தை அடுத்து சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபது தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here