பிந்திய செய்திகள்

மீண்டும் இலங்கையில் அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரதம்!!!

இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை – கொழும்பு கோட்டைக்கு இடையில் நடைபெற்ற நகரங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்பட்ட “புலதுசி ” அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை மீண்டும் எதிர்வரும் 28.01.2022 திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியின் தீர்மானத்திற்கு குறித்த ரயில் சேவை மட்டக்களப்பு – கொழும்பு சேவையாக விஸ்தரிக்கப்படவுள்ளது.

குறித்த புகையிரத சேவையானது மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். மீண்டும் பிற்பகல் 15.05 கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதமானது இரவு 21.52 க்கு மட்டக்களப்பை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts