பிந்திய செய்திகள்

முப்படை வீரர்களை உள்ளடக்கி சிறிலங்காவில் புதிய “ஸ்பீட் படையணி”…!

இலங்கை – சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை சமாளிக்க முன்னாள் முப்படை வீரர்களை உள்ளடக்கிய 500 பேர் கொண்ட “ஸ்பீட் படையணி” (SPEAT Force) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மேலும்

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ், தேசிய கொள்கைக் கட்டமைப்பிற்கு இணங்க, SPEAT Force என்ற படையணி சிறைத்துறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை “Sri Lanka Prisons Emergency Action and Tactical Force” (SPEAT Force) என்ற பெயரில், இதன் முதல் குழுவின் 194 பேர் நான்கு மாத நீண்ட பயிற்சிகளை முடித்து நேற்று அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சிறைக் கைதிகளைக் கையாளும் போது சுய ஒழுக்கத்துடன் வலுவூட்டப்பட்ட மனிதாபிமான அணுகுமுறையுடன் இந்தப் படையினர் தமது பணிகளை மேற்கொள்வர்கள் எனவும்,

சிறைத் தண்டனை முடிந்து மீண்டும் சமூகத்திற்குள் நுழையும் முன், கைதிகளை பயனுள்ள குடிமக்களாக மாற்றுவது இந்தப் படையணியின் கடமையாகும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts