இன்று(28) காலை இலங்கையில் ஹட்டன் – டிக்கோயா சலங்கை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/513c3b4a-a687-42cb-b578-1d04f182bd66/22-61f369f4b142a.webp)
ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/1df12d05-1dc3-4c09-adc1-a84280c37dac/22-61f369f46b181.webp)
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கு வழிவிட முற்பட்ட போதே, குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/cc528a46-efc0-46ca-b958-216345c76cd8/22-61f369f4d5792.webp)
குறித்த பேருந்தில் 17 பேர் பயணித்த நிலையில், 16 பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/38751ff5-9b9a-4b8d-a0a5-cdb7c69b93db/22-61f369f504de9.webp)
பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.