Home இலங்கை இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; ஒருவர் பலி;16 பேர் காயம்

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; ஒருவர் பலி;16 பேர் காயம்

0
இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; ஒருவர் பலி;16 பேர் காயம்

இன்று(28) காலை இலங்கையில் ஹட்டன் – டிக்கோயா சலங்கை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Gallery

ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

Gallery

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கு வழிவிட முற்பட்ட போதே, குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Gallery

குறித்த பேருந்தில் 17 பேர் பயணித்த நிலையில், 16 பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Gallery

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here