பிந்திய செய்திகள்

இலங்கையில் இனி மாட்டு வண்டியில் தான் பயணம்..!

சிறிலங்காவில் அந்நிய செலாவணி கையிருப்பு பயங்கரமாக குறைந்துள்ளதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் இலங்கையில் இருந்த ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் டாலர் நெருக்கடி காரணமாக மூடப்பட்டுவிட்டது.

ஆலை மூடப்பட்டதால் சுத்திகரிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ள பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது. ஆனால், டிசம்பர் மாத தொடக்கத்தின்போது ஒரு மாதத்திற்கு மட்டுமே பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்யத் தேவையான அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது.

இந்நிலையில் தற்போது அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாக குறைந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 ரூபாய் உயர்ந்து 177 ரூபாயாக உள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை 10 ரூபாய் உயர்ந்து 121 ரூபாயாக உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து, பெட்ரோலிய பொருட்களை வாங்க இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts