இன்று(6)பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 31 வயதுடைய ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர் பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













































