பிந்திய செய்திகள்

யாழில் 8 வயது சிறுமிக்கு மோட்டார் சைக்கிளால் ஏற்பட்ட நிலை

யாழ்.கொடிகாமம் – வேம்பிராய் பகுதியில் நேற்றுமாலை
இடம்பெற்ற விபத்தில் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புத்தூர் வீதி ஊடாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்று மீசாலை- வேம்பிராய் பகுதியில் கிளை வீதி ஒன்றினுள் திருப்ப முற்பட்டவேளையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

விபத்தில் மந்துவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி கால் முறிந்த நிலையிலும், 37வயதான அவரது தாய் தலையில் படுகாயமடைந்த நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts