Home இலங்கை உயிரிழந்த பிச்சைகாரர் -கால்சட்டைப் பையில் இருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை பணம்

உயிரிழந்த பிச்சைகாரர் -கால்சட்டைப் பையில் இருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை பணம்

0
உயிரிழந்த பிச்சைகாரர் -கால்சட்டைப் பையில் இருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை பணம்

ஒருவர் நேற்று (10) நகரமொன்றில் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்த பிச்சைக்காரர் திடீரென உயிரிழந்துள்ளதுடன் அவரது கால்சட்டைப் பையில் இருந்து பெருந்தொகை பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் நபர் ஹக்மன பிரதேசத்தில் வசிக்கும் பிச்சைக்காரர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவரது கால்சட்டை பைகளில் கிட்டத்தட்ட 400,000 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 69 வயதான ஹக்மான கொங்கல. தி. விமலதாச என்ற பிச்சைக்காரனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியாக வசித்து வந்த இவர், இதற்கு முன்பு ஹெவிசி இசைக்கருவி வாசிப்பவராக பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவருக்கு உறவினர்கள் யாரும் இருப்பதாக தகவல் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here