பிந்திய செய்திகள்

நள்ளிரவில் வீட்டினுள் நுழையும் வன்முறைக் கும்பல்கள்!!

இன்று நள்ளிரவு 12:15 மணியளவில் யாழ் தெல்லிப்பழை காவல்நிலைய பிரிவிற்கு உட்பட்ட அளவெட்டி மேற்கில் உள்ள, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.குறித்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தெரியவருவதாவது,

வலி. வடக்கு பிரதேச சபையின், முன்னாள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரான நல்லையா புரட்சிதாசனுடைய வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறைக்கும்பல் வீட்டின் முன் கதவு, கூரைத் தகரங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியதுடன், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

வீட்டின் கதவை திறக்க முடியாத நிலையில் குறித்த வன்முறை குழு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளரான நல்லையா புரட்சிதாசன் இன்று காலை தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts